Breaking
Sun. Sep 8th, 2024

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் யுவதியொருவர் இராணுவத்தில் இணைந்துள்ளார்.

அம்பாறையைச் சேரந்த மு.றிசானா என்ற முஸ்லிம் யுவதியே இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்றுள்ளார்.

இந்த முஸ்லிம் யுவதி உட்பட 36 தமிழ் யுவதிகள் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாத கால இராணுவ பயிற்சியை நிறைவு செய்து நேற்று முன்தினம் வெளியேறினர்.

இப்பயிற்சிநெறியின் நிறைவு விழா, திருகோணமலையிலுள்ள 22ஆவது படைப்பிரிவின் தலைமை அலுவலகமான பிளான்ரன் பொயின்ற் முகாமில்  நடைபெற்றது.

Related Post