Breaking
Sat. Sep 21st, 2024

நாட்டில் தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் திடீர் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு முப்படையினரின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை உரிய முறையில் செயற்படுத்துவதற்காக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியின் அலுவலகத்தில் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய 17 ஆம் திகதி பிற்பகல் தொடக்கம் இவ் நடவடிக்கை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவசர அனர்த்த நிலமைகள் தொடர்பில் தகவல்களை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு நேரடியாகவோ அல்லது தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பாதுகாப்பு அமைச்சு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பதில் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகவரி
பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியின் அலுவலகம்
(அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை பிரிவு)
கட்டடிட இலக்கம் 05,
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், பௌத்தாலோக்க மாவத்தை,
கொழும்பு – 07.

தொலைபேசி இலக்கங்கள்

011 2 674502,
011 2 674503,
011 3 075792,
011 3 070275,
011 3 818612.

By

Related Post