Breaking
Wed. Mar 19th, 2025
மாகாணசபைகளுக்கு உட்பட்ட விடயங்களை ஆராய்வதற்காக மாகாண முதலமைச்சர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அமைச்சரவை கூட்டத்துக்கு சமுகமளிக்கவுள்ளனர்.
மத்திய அரசாங்கத்தரப்பு இதனை தெரிவித்துள்ளது.

அமைச்சரவை இணைப்பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் இது தொடர்பில் சமர்ப்பித்த யோசனையை ஜனாதிபதி ஏற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்

இதேவேளை நாடாளுமன்ற குழுக்களின் தலைவர்களும் மாதமொருமுறை அமைச்சரவைக் கூட்டத்துக்கு சமுகமளிக்கவுள்ளனர்

இதற்கான யோசனையை பிரதமர் ரணில் முன்மொழிந்துள்ளதாகவும் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

By

Related Post