Breaking
Sat. Sep 21st, 2024

இன­வா­தத்தைத் தூண்டி அர­சியல் செய்­வ தனை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் உடன் நிறுத்திக் கொள்­ள­வேண்டும். தேர்தல் மேடை­களில் இன­வாத கருத்­துக்­களை கூறி நாட்டை தீயிட்டு நாச­மாக்க முனையக்கூடாது. ஒன்­று­பட்ட இலங்­கைக்­குள்­ளேயே அதி­காரப் பர­வ­லாக்கம் என்­பதே எமது நிலைப்­பா­டாகும் என்று ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­ தி­லக தெரி­வித்தார்.

இதன்­ பி­ர­காரம் இன­வா­தத்தைத் தூண்டி நாட்டை அரா­ஜகப்போக்­கிற்கு கொண்டுசெல் லும் விமல் வீர­வன்ச­விற்கு அடி­ப­ணிந்த கட்­சி­யாக ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி பின்­தள்­ளப்­பட்­டமை கவ­லை­ய­ளிக்கக் கூடி­ய­தாக இருப்­ப­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

மேலும் சிறுப்­பான்மை அர­சாங்கம் வழங்­கிய சலு­கையின் கார­ண­மாக ஒரு குடும்­பத்­திற்கு 6500 ரூபாவை சேமிக்க முடிந்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக மேலும் அங்கு குறிப்­பி­டு­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஜன­வரி 8 ஆம் திகதி மக்கள் ஆணையை மதிக்­காமல் மீளவும் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ளார். இத்­த­கைய செயற்­பாடு மிகவும் கவ­லை­ய­ளிக்க கூடி­ய­தாக உள்­ளது. எவ்­வா­றா­யினும் இம்­முறை பாரா­ளு­மன்ற தேர்­த­லிலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தோல்வி காண்­பது உறு­தி­யாகும்.

தனது பிறப்­பி­ட­மான அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் கள­மிங்க பயந்து குரு­ணாகல் மாவட்­டத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ கள­மி­றங்­கு­கின்றார். இருந்த போதிலும் குரு­ணா­கலில் வாக்­கெ­டுப்­ப­தற்கு மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் முடிந்­தாலும் கூட அவ­ரினால் அங்கு வாக்­க­ளிக்க முடி­யாது. அவர் மெத­மு­ல­ன­விற்கே செல்ல வேண்டும்.

இந்­நி­லையில் தற்­போது மஹிந்த ராஜ­பக்ஷ தோல்­வியின் மீது அச்சம் கொண்டு நாளுக்கு நாள் தோல்வி அடை­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை அறிந்­துக்­கொண்­டி­ருக்­கின்றார்.இந்­நி­லையில் தன்­னு­டைய கட்சி தோல்வி அடையும் என்­ப­தனை அறிந்­ததன் விளை­வாக பல்­வேறு சலு­கை­களை வழங்கப் போவ­தாக கூறி­வ­ரு­கின்றார்.

சுமார் 20 வரு­டங்­க­ளாக நாட்டை ஆட்சி செய்தும் கூட சலு­கை­களை வழங்க முற்­ப­டாத மஹிந்த ராஜ­பக்ஷ தற்­போது மக்­களை ஏமாற்றும் வகையில் நாட்டு மக்­க­ளுக்கு பல்­வேறு சலு­கை­களை வழங்­கப்­போ­வ­தாக கூறு­கின்றார்.

பல்­க­லை­க­ழக மாண­வர்­களின் புல­மை­ப­ரீ­சிலை 6000 ரூபா­வாக அதி­க­ரிப்­ப­தாக கூறு­கின்­றனர். எனினும் நல்­லாட்­சியில் ஏற்­க­னவே குறித்த சலு­கை­களை வழங்­கி­விட்டோம். எனவே இனி­மேலும் மஹிந்த ஆட்சி செய்ய வேண்­டிய அவ­சி­ய­மில்லை. 20 வரு­டங்­க­ளாக வழங்­காத சலு­கையை மஹிந்­த­வினால் இதற்கு பின்­னரும் வழங்க முடி­யாது.

இந்­நி­லையில் தற்­போது தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்­ஸவின் இன­வாத சிந்­த­னை­யுடன் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பய­ணக்­கின்­றமை கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். இன­வாதம் இல்­லாமல் இவர்­க­ளினால் அர­சியல் செய்ய முடியாது.

இனவாதத்தை தூண்டி அரசியல் செய்வதனை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். தேர்தல் மேடைகளில் இனவாதத்தை கருத்துக்களை கூறி நாட்டை எரித்து நாசமாக்குவதற்கு முனைய கூடாது. ஒன்றுப்பட்ட இலங்கைக்குள்ளேயே அதிகார பரவலாக்கம் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

Related Post