Breaking
Sat. Sep 21st, 2024
நாட்­டுக்­கா­கவும், பௌத்த மதத்­துக்­கா­கவும் குரல்­கொ­டுத்த ஞான­சார தேரரின் கடந்த காலத்தை ஆராய்ந்து கொண்­டி­ருக்­காது உலமா சபையின் ஐ.எஸ். அமைப்­பு­ட­னான தொடர்­பு­களைத் தேடிப்­பார்க்­கு­மாறு உள­வுப்­பி­ரி­வி­ன­ருக்கு பொது­ப­ல­சேனா அமைப்பு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.
ஐ.எஸ்.அமைப்பில் இணைந்து செயற்­பட்டு சிரி­யாவில் கொல்­லப்­பட்ட அபூ சிலானி என்­ப­வ­ருக்கும் இலங்கை ஐம்­இய்­யத்துல் உல­மா­வுக்கும் நெருங்­கிய தொடர்பு இருந்­துள்­ளது. இதனால் உலமா சபைக்கும் ஐ.எஸ் அமைப்­புக்கும் தொடர்­புள்­ள­தாக சந்­தே­கிக்­கிறோம் என்றும் தெரி­வித்­துள்­ளது.
கொழும்பு, கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பௌத்த மத்­திய நிலை­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய பொது­ப­ல­சே­னாவின் நிறை­வேற்று பணிப்­பாளர் கலா­நிதி டிலந்த விதா­னகே மேற்­கு­றிப்­பிட்ட வேண்­டு­கோளை விடுத்தார்.அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்
ஐ.நா.சபையின் செய­லாளர் நாயகம் அண்­மையில் ஐ.எஸ் அமைப்பு தொடர்­பாக 20 பக்க அறிக்­கை­யொன்­றினை பாது­காப்புச் சபைக்கு கைய­ளித்­துள்ளார். அதில் முஸ்லிம் தீவி­ர­வாத அமைப்­புகள் பற்றி குறிப்­பிட்­டுள்ளார். சூரா கவுன்ஸில் பற்­றியும் அவர் குறிப்­பிப்­பிட்­டுள்ளார். அதனால் எமது நாட்­டி­லுள்ள சூரா கவுன்ஸில் மீதும்  நாம் பயப்­பட வேண்­டி­யுள்­ளது.
பான்­கி­மூனின் அறிக்கை
ஐ.நாடுகள் சபை செய­லாளர் நாயகம் பன்­கீமூன் பாது­காப்புச் சபைக்கு சமர்ப்­பித்­துள்ள அறிக்­கையில் இஸ்­லா­மிய ஆட்சி தெற்­கா­சி­யாவில் வியா­பிக்கும் நிலைமை உரு­வா­கி­யுள்­ள­தா­கவும் இது பரவி வரு­வ­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார். இந்த தெற்­கா­சிய வல­யத்­தி­னுள்ளே இலங்­கையும் அடங்­கு­கி­றது.
தெற்­கா­சிய நாடுகள் தமது எல்­லை­களை பாது­காப்­புடன் வைத்துக் கொள்ள வேண்­டு­மெ­னவும் இந்த நாடு­களின் எல்­லைகள் ஊடா­கவே ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொள்­வ­தற்கு இஸ்­லா­மிய தீவி­ர­வா­திகள் பய­ணிக்­கின்­றார்கள் எனவும் பான்­கீமூன் அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.
இஸ்­லா­மிய தீவி­ர­வா­தி­களின் மைய­மாக இலங்கை இருக்­கி­றது. இதனை நாம் 2 வரு­டங்­க­ளுக்கு முன்பே அர­சாங்­கத்­துக்கு எச்­ச­ரித்­தி­ருந்தோம். நாம் அன்று கூறி­யதை இன்று பான்­கிமூன் கூறு­கிறார். அதனால் இப்­போ­தா­வது எமது நிலத்தை இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்­தி­ட­மி­ருந்து காப்­பாற்ற அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.
சர்­வ­தேச முஸ்லிம் பெண் பாட­சா­லை­களில் தீவி­ர­வாதம்
நாட்­டி­லுள்ள சர்­வ­தேச முஸ்லிம் பெண் பாட­சா­லை­களில் அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான கல்­லூ­ரி­களில் கடந்த 7 வரு­டங்­க­ளாக அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­பட்டு வரு­கி­றது. மாண­விகள் அணியும் நிக்காப், புர்க்கா என்­பன தீவி­ர­வா­தத்­திற்கு அத்­தாட்­சி­யாக அமைந்­துள்­ளன.
கொழும்பில் முஸ்லிம் பெண்கள் கல்­லூ­ரி­களில் தீவி­ர­வாதம் போதிக்­கப்­ப­டு­கி­றது என்­பதை நாம் ஏற்­க­னவே அர­சுக்கு எச்­ச­ரித்­தி­ருந்தோம்.
ஆனால் அரசு கவ­னத்தில் கொள்­ள­வில்லை. ஆனால் இப்­போது பாது­காப்பு துறையின் உயர் அதி­காரி ஒரு­வரே இதனை உறுதி செய்­துள்ளார்.
மத்­ர­ஸாக்­களில் அடிப்­படை வாதம்
நாட்­டி­லுள்ள மத்­ர­ஸாக்­க­ளிலும் அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­பட்டு வரு­கி­றது. இத­னையும் நாம் ஏற்­க­னவே அர­சாங்­கத்­துக்கு எச்­ச­ரித்­தி­ருந்தோம். ஆனால் அரசு கவ­னத்தில் கொள்­ள­வில்லை.

By

Related Post