Breaking
Sat. Mar 15th, 2025
சர்வதேச பெண் பொலிஸ் அமைப்பினால் வழங்கப்படும் International Recognition and Scholarship விருது இம்முறை கிடைத்திருப்பது இலங்கை பிரதி பொலிஸ் அதிகாரி விமதி பெரியப்பெரு என்பவருக்காகும்.
இவ்விருதினை இதுவரையில் இலங்கை பெண் பொலிஸாரினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை, இதுவே முதல் தடவையாகும்.
குறித்த விருது  ஒகஸ்ட் மாதம் இறுதியில் இடம்பெறவுள்ள விருது வழங்கும் நிகழ்வில் வழங்கப்படவுள்ளது.
உலகின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பெண் அதகாரிகளின் செயற்திறன், செயல்பாடுகளை கருத்தில் கொண்டு இவ்விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post