கொழும்பு மாநகர சபை, கொலன்னாவ நகர சபை, கொடிகாவத்த – முல்லேரியா பிரதேச சபைகளில் ஜக்கிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலொன்று இன்று (03) கொழும்பில் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலின் போது, உள்ளூராட்சி தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், தெஹிவளை-கல்கிஸ்ஸ மநாகர சபை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


