Breaking
Sun. Mar 16th, 2025

இலங்கையில் எச்ஐவி நோய்த் தொற்று உண்டா என சோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்தாண்டில் எச்ஐவி நோய்த் தொற்று உண்டா என சோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பால் நோய் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதியில் சுமார் எட்டு லட்சம் பேர் தமக்கு எயிட்ஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதனை பரிசோதனை செய்து கொண்டுள்ளனர் என நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கு இடையிலான பாலுறவு அதிகரித்துள்ள காரணத்தினால் எயிட்ஸ் நோய் அதிகளவில் பரவி வருவதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையில் அண்மை காலமாக எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு பதிவாகியுள்ளது.

பாதுகாப்பற்ற பாலுறவு மற்றும் மரபு நெறிகளை மீறிய பாலியல் தொடர்பு போன்ற காரணிகளினால் இலங்கையில் எச்ஐவி நோய்த் தொற்று அதிகளவில் பரவி வருவதாக தெரிவிக்கபடுகிறது.

By

Related Post