Breaking
Tue. Mar 18th, 2025

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே….!! ஆஃப்ரிக்காவில் ஒரே நேரத்தில் 2500 பேர் இஸ்லாத்தை தழுவினர்….!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் ஆஃப்ரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் ஒரே நேரத்தில் 2500 பேர் உலகம் போற்றும் மார்க்கமான தூய இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர்.

தமிழகத்தில் தலித் மக்களை கீழ் சாதி என்று மிக இழிவாக நடத்திய காரணத்தினால் மீனாட்சிபுரம் கிராமமே இஸ்லாத்தை ஏற்று ரஹ்மத் நகராக மாறியது போல்…

உலகம் போற்றும் பாப் இசை பாடகர்களாக இருந்து தாம் கருப்பினம் என்ற ஒரே காரணத்தினால் தம்முடைய வெள்ளை அரசாங்கம் தம்மை அங்கீகரிக்க மறுத்த காரணத்தினால் பாப் இசை பாடகர்களான மைகேல் ஜாக்சன், கேட் ஸ்டீவன்ஸ் உள்ளிட்டோர் இஸ்லாத்தை ஏற்று மைகேல் ஜாக்சன் – மீக்காயில் ஜாக்சனாகவும், கேட் ஸ்டீவன்ஸ் – யூசுப் இஸ்லாமாகவும், உலக குத்து சண்டை சாம்பியன் கேசியஸ் கிளே – முஹம்மது அலி கிளேவாகவும் மாறியது போல்….

கருப்பின மக்களை கொண்ட ஆஃப்ரிக்காவில் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறையாது – ஆயிரம் ஊடகங்கள் பொய் பிரச்சாரம் செய்தாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது.

ஏனென்றால் இஸ்லாம் இறைவனின் மார்க்கமாகும்.

Related Post