Breaking
Sat. Sep 21st, 2024

அநு­ரா­த­புரம் வலயக் கல்விப் பணி­மனைக் ­குட்­பட்ட பகு­தி­யி­லுள்ள பாட­சாலை­களில் ஐந்து வருட காலத்­துக்கு மேல் சேவை­யாற்­றிய மற்றும் மேல­திக ஆசி­ரி­யர்­க­ளுக்கு இட­மாற்றக் கடி­தங்கள் அனுப்­பப்­பட்டும் இட­மாற்றம் பெற்றுக் கொடுக்­கப்­பட்ட பாட­சா­லை­களில் கடமையைப் பொறுப்­பேற்­காத ஆசி­ரி­யர்­களின் மாதாந்த சம்­ப­ளத்தை தற்­கா­லி­க­மாக நிறுத்த தீர்­மா­னித்­துள்­ள­தாக அநு­ரா­த­புரம் வல­யக் கல்விப் பணிப்­பாளர் திரு­மதி குமு­துனி ஆரி­ய­வங்ச தெரி­வித்தார்.

ஆசி­ரியர் இட­மாற்­றச்­சங்க உறுப்­பி­னர்கள் செய்த தவ­று­க­ளினால் ஆசி­ரியர் இட­மாற்ற நட­வ­டிக்­கை­களில் பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்ள போதும் இட­மாற்றக் கடி­தங்கள் கிடைத்த ஆசி­ரி­யர்கள் உடன் உரிய பாட­சா­லை­க­ளுக்கு செல்­வது கட்­டா­ய­மா­ன­தாகும். பல்­வேறு தரப்­பா­ரி­னதும் வாய்ப்­பேச்­சுக்கள் மற்றும் வாக்­கு­று­தி­களை நம்பி ஏமாற்­ற­ம­டை­யாமல் உரிய பாட­சா­லை­க­ளுக்குச் சென்று கட­மையைப் பொறுப்­பேற்­குமாறு கேட்­டுக்­கொள்­வ­துடன் தொடர்ந்தும் போகா மல் இருப்­ப­வர்­க­ளது விப­ரங்கள் தற்­போது பாட­சா­லை­க­ளி­லி­ருந்து பெறப்­பட்­டுள் ளன. இதன் அடிப்­ப­டையில் இம்மாதம் தொடக்கம் அவர்களது மாதாந்தச் சம்பளம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என வும் வலயக் கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

By

Related Post