Breaking
Sat. Dec 13th, 2025

புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையுள்ள கடற் பிரதேசங்களில் இன்று பலத்த காற்று வீசும் சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் போது சில பகுதிகளில் 60 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பிரதேசங்களில் மழை பொழியும் சாத்தியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமை காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் சற்று அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு விடுத்துள்ளது.

By

Related Post