Breaking
Sat. Sep 21st, 2024

கன­டாவில்  முதன்­மு­றை­யாக திரு­நங்கை ஒருவர் நீதி­ப­தி­யாக பத­வி­யேற்­றுள்ளார்.

கன­டாவின் வர­லாற்றில் முதன் முத­லாக அந் நாட்டின் மனிடோபா மாகா­ணத்தை சேர்ந்த திரு­நங்­கை­யான காயெல் மகென்ஷி மாகாண நீதி­ப­தி­யாக அதி­கா­ர­பூர்­வ­மாக பத­வி­யேற்­றுள்ளார்.

மனி­டோபா பல்­க­லைக்­க­ழ­கத்தில் சட்­டக்­கல்­வியைப் பயின்ற இவர் கடந்த 2006ஆம் ஆண்டு வழக்­க­றி­ஞ­ராக பட்டம் பெற்றார்.

சட்­டத்­து­றையில் அவ­ருக்கு இருந்த திற­மையின் அடிப்­ப­டையில், அவரை மனி­டோபா மாகாண நீதி­ப­தி­யாக தெரிவு செய்­துள்­ள­தாக சட்­டத்­துறை அமைச்­சகம் கடந்த டிசம்­பரில் அறி­வித்­தி­ருந்­தது.

இந்த நிலையில், கடந்த வெள்ளியன்று வின்­னிபெக் நகரில் நடந்த கூட்­டத்தில் நீதி­ப­திகள், நண்­பர்கள் மற்றும் குடும்ப உறுப்­பி­னர்கள் முன்­னி­லையில் அதி­கா­ர­பூர்­வ­மாக இவர் பத­வி­யேற்­றுள்ளார்.

இத­னை­ய­டுத்து, நாடு முழு­வதும் உள்ள சில திரு­நங்­கைகள் இது எங்­க­ளுக்கு கிடைத்த ஒரு வெற்­றி­யாக கொண்­டா­டு­வ­தாக என்­னிடம் உற்­சா­க­மாக கூறி­னார்கள் என அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

மேலும் கொடுக்­கப்­பட்­டுள்ள இந்த உய­ரிய பத­வி­யையும், பொறுப்­பையும் நேர்­மை­யா­கவும், சமூ­கத்­திற்கு பாது­காப்பு உண்­டாக்கும் கட­மை­யாக நினைத்து செயல்­ப­டுவேன் எனவும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

கனடா வரலாற்றில் முதன் முதலாக நீதிபதியாக பதவியேற்றுள்ள காயெல்மகென்ஷிற்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post