Breaking
Sat. Sep 21st, 2024
கெகிராவ பல்லேவெதியாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகன விபத்து நேற்று (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறியரக பாரவூர்தி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதினாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் குறித்த வாகனங்களின் சாரதிகள் இருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

By

Related Post