Breaking
Tue. Mar 18th, 2025
கொடதெனியாவ சிறுமியின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் சிறுமியின் வீட்டின் அருகில் வசிப்போர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

——————————————-
கொட்டதெனியாவையில் சிறுமி ஒருவர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பான மற்றுமொரு மரபணு பரிசோதனை அறிக்கை விசாரணைக் குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது.

காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைதான 17 வயதுடைய இளைஞர் உள்ளிட்டவர்களிடம் நேற்று வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தது.

கொலையுண்ட சிறுமியிடம் இருந்து மீட்கப்பட்ட தலை முடி தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கையே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Post