Breaking
Tue. Mar 18th, 2025

கொஸ்கம, சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பினால் பிரதேசத்தில் ஏற்பட்ட கழிவுகளை அகற்றும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் வேண்டுகோளுக்கிணங்க மேல் மாகாண நிர்வாக திணைக்களத்தினால் குறித்த வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு கூறியுள்ளது.

அதன்படி இத்திட்டத்திற்காக 22 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதனூடாக பெகோ மற்றும் டிப்பர் வாகனங்களை பயன்படுத்தி நாளொன்றுக்கு 50 டொன் கழிவுகள் அகற்றப்பட உள்ளதாக மாகாண மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு கூறியுள்ளது.

By

Related Post