Breaking
Sat. Sep 21st, 2024

நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த விமா­ன­மொன்­றுடன் பஸ் ஒன்று மோதிய சம்­பவம் கொல்­கத்­தாவில் நேற்று இடம்­பெற்­றது.

1384344

கொல்­கத்­தா­வி­லுள்ள நேதாஜி சுபாஸ் சந்­தி­ரபோஸ் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த எயார் இந்­தியா நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான விமானம் ஒன்றின் மீது, விமான நிலை­யத்­திற்குள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த ஜெட் எயார் வேஸ் நிறு­வ­னத்தின் பஸ் ஒன்று மோதி­யது. நேற்று (4) அதி­காலை 5.25 மணி­ய­ளவில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது.

1384327

அஸாம் மாநி­லத்­தி­லுள்ள சில்சார் நக­ருக்குப் புறப்­ப­ட­வி­ருந்த விமா­னமே இவ்­வாறு சேத­ம­டைந்­ததுள்ளது.

13843_d0a1c0e6-a86f-11e5-a7bd-0a525bed8fcc

மேற்­படி பஸ்ஸின் சாரதி அதி­கா­ரி­களால் விசா­ரிக்­கப்­பட்­ட­போது, உறக்கக் கலக்­கத்­தினால் விமா­னத்தின் மீது பஸ்ஸை மோதி­விட்­ட­தாக அவர் கூறியுள்ளார் என தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­போது விமா­னத்­திலோ, பஸ்­ஸிலோ பய­ணி கள் எவரும் இருக்­க­வில்லை.

இச்­சம்­ப­வத்­தினால் எவ­ருக்கும் காய­மேற்­ப­ட­வில்லை. ஆனால், சுமார் 800 கோடி ரூபா பெறுமதியான மேற்படி விமானம் கடுமையாக சேத மடைந்துள்ளதாக எயார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

By

Related Post