Breaking
Sun. Sep 22nd, 2024

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வா­சலை தற்­போ­துள்ள இடத்­தி­லி­ருந்து அகற்றி நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை தம்­புள்ளை நக­ருக்கு அண்­மையில் வழங்­க­வுள்ள காணியில் புதி­தாக நிர்­மா­ணித்துக் கொள்­­வ­தற்கு வக்­பு ­சபை பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

வக்பு சபை அங்­கத்­த­வர்­க­ளுக்கும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களை அடுத்தே வக்­பு­சபை இந்த அங்­கீ­கா­ரத்தை வழங்­கி­யுள்­ளது.

‘தம்­புள்ளை நக­ருக்கு அண்­மையில் பள்­ளி­வா­ச­லுக்கு நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை காணி வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளதால் வச­தி­யான ஒரு பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்துக் கொள்­ள­மு­டியும்.

தற்­போது பள்­ளி­வாசல் இருக்கும் இடத்­திலே தொடர்ந்தும் பள்­ளி­வாசல் இருக்­கு­மென்றால் அது எது­வித அபி­வி­ருத்­தி­யு­மின்றி தகரத்திலான பள்­ளி­வா­ச­லா­கவே இருக்கும்.

பள்­ளி­வாசல் நிர்­வாகம் புதிய இடத்­துக்கு இடம்­பெ­யர தீர்­மா­னித்­துள்­ள­மையை வக்பு சபை வர­வேற்­கி­றது.’ என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாஸீன் ‘விடி­வெள்ளி’க்குத் தெரி­வித்தார்.

அவர் இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் ‘பள்­ளி­வா­ச­லுக்கு வழங்­கப்­பட்­டுள்ள காணிக்கு அரு­கா­மையில் தற்­போது பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் வாழும் குடும்­பங்­க­ளுக்கும் காணி வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இது நல்­லவோர் ஏற்­பா­டாகும். பள்­ளி­வாசல் நிர்­வாகம் புதிய இடத்­துக்கு இட­மா­றிக்­கொள்ள விருப்பம் தெரி­வித்­துள்­ளமை தம்­புள்­ளையில் இன நல்­லி­ணக்­கத்­துக்­கான முன்­னு­தா­ர­ண­மாகும்.

2012 ஆம் ஆண்டு முதல் இப்­பள்­ளி­வாசல் பல்­வேறு சவால்­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றது. இப்­ப­கு­தி­யி­லுள்ள பௌத்­த­தேரர் பள்­ளி­வா­சலை பல­வந்­த­மாக அகற்ற மேற்­கொண்ட முயற்­சிகள் கைகூ­ட­வில்லை.

முஸ்­லிம்கள் பாதை அபி­வி­ருத்­திக்கும் நகர அபி­வி­ருத்­திக்கும் நீர்­வி­நி­யோ­கத்­திட்­டத்­திற்கும் ஒத்­து­ழைப்­பு­களை வழங்க வேண்டியுள்ளது.

இதற்கு சிறந்த தீர்வு பள்ளிவாசலை தற்போது இருக்கும் இடத்திலிருந்து அகற்றிக்கொள்வது தான் ஒரே வழி.

நகருக்கு அண்மையில் புதிதாக பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்ள அரசாங்கமும் உதவி செய்யுமென நம்புகிறேன் என்றார்.

By

Related Post