Breaking
Sat. Sep 21st, 2024

தம்­புள்ள ஜும்மா பள்ளியை நிர்­மா­ணிக்கும் காணியை விடு­விப்­பதில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை தயக்கம் காட்டிவருவதாக மத்­திய மாகாண சபை உறுப்­பினர் ஏ.எச்.எம்.இப்­றாஹிம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தம்­புள்ள பிர­தேச அபி­வி­ருத்தி ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்டம், தம்­புள்ள தொகுதி அமைப்­பா­ளரும் பிர­தேச அபி­வி­ருத்திக் குழுவின் இணைத்­த­லை­வ­ரு­மான ப்ரியான் விஜே­ரத்ன தலை­மையில் நடை­பெற்ற போது தம்­புள்ள நகரில் முஸ்லிம் ஜும்ஆப் பள்­ளி­வாசல் நிர்­மா­ணிப்­ப­தற்­கென இனங்­கா­ணப்­பட்­டுள்ள காணியை விடு­விப்­பதில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினர் தொடர்ந்தும் கால­தா­மதம் செய்து வரு­வது தொடர்பில் மத்­திய மாகாண சபை உறுப்­பினர் ஏ.எச்.எம்.இப்­றாஹிம் கேள்வி எழுப்­பினார்.

அண்­மையில் மாத்­த­ளைக்கு வருகை தந்­தி­ருந்த மேல் மாகாண மற்றும் நகர அபி­ருத்தித் துறை அமைச்சர், பாட்­டாலி சம்­பிக்க ரண­வக்­கவைத் தாம் நேரில் சந்­தித்து, தம்­புள்ள ஜும்ஆ பள்ளிவாச­லுக்­கென இனங்­கா­ணப்­பட்­டுள்ள காணியை தாம­த­மின்றி விடுத்துத் தரு­மாறு வேண்டிக் கொண்­ட­தா­கவும், காணியை விடு­வித்துத் தரு­வதில் எவ்­வித சிக்­கல்­களும் இல்­லை­யென அமைச்சர் அதன் போது தெரி­வித்­த­தா­கவும் அவர் சுட்டிக் காட்­டினார்.

இதற்கு பதிலளித்த மாத்­தளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான ரஞ்சித் அலுவிகார உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அத்துடன், தம்­புள்ள நகரில் முஸ்லிம் பள்­ளி­வா­ச­லொன்றை நிர்­மா­ணிப்­பது தொடர்பில் தாம் தம்­புள்ள ரஜ­மஹ விகா­ரையின் அதிபர் சுமங்­கல தேர­ருடன் கலந்­து­ரை­யாடி ஓர் இணக்­கப்­பாட்­டிற்கு வந்­தி­ருக்கும் நிலையில், தம்­புள்ள பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்­திற்குச் சமீ­ப­மாக இனங்­கா­ணப்­பட்­டுள்ள காணியைக் கால­தா­ம­த­மின்றி விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களைத் துரி­த­மாக மேற்­கொள்­ளு­மாறும், நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்றார். (விடிவெள்ளி)

By

Related Post