Breaking
Sat. Sep 21st, 2024

லஞ்ச, ஊழல் தொடர்பில் பலர் இன்று (11) கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ற்றுலா அபிவிருத்தி, கிறிஸ்தவ விவகாரம் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அடுத்து வரும் நாட்களில் றக்பி வீரர் வசிம் தாஜுதீன் மரணம் தொடர்பில் முக்கிய பிரபலங்கள் சிலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் முக்கிய பலர் கைது செய்ப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இதுவரையில் எவரும் அவ்வாறு கைது செய்யப்படவில்லை என அமைச்சரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

By

Related Post