Breaking
Thu. Apr 24th, 2025

பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று, திங்கட்கிழமை (23) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, அம்பாறை மாவட்டத்தில், கடந்த வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான நஷ்டஈடுகளை வழங்குவது தொடர்பில் தாஹிர் எம்.பி கேட்டறிந்துகொண்டார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கான நிதியொதுக்கீடுகள் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பெற்றதும், முறையாக பகிர்ந்தளிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.

இச்சந்திப்பில், தாஹிர் எம்.பியின் பிரத்தியேக செயலாளர் எஸ்.முஹம்மட் அலி ஜின்னா மற்றும் இணைப்பாளர்கள் உடனிருந்தனர்.

Related Post