Breaking
Sat. Sep 21st, 2024

தெமட்­ட­க்கொடை, சமந்தா திரை­ய­ரங்கு அருகே தெமட்­ட­க்கொட சமிந்த உள்­ளிட்ட பாரதலக் ஷ்மன் பிரே­மச்­சந்­தி­ரவின் கொலை சந்­தேக நபர்­களை ஏற்றிச்சென்ற சிறைச்­சாலை பஸ் வண்டி மீது மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டின் போது, துப்­பாக்கிச் சூட்டை நடத்­திய சந்­தேக நபர்கள் தரப்­பிலும் ஒரு­வ­ருக்கு காயம் ஏற்­பட்­டுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கின்­றது. சிறைச் சாலை பஸ் வண்­டியில் பய­ணித்த பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் நடத்­திய பதில் தாக்­கு­தலில், தாக்­குதல் நடத்த மோட்டார் சைக்­கிளில் வந்த சந்­தேக நபர் ஒரு­வரே இவ்­வாறு காய­ம­டைந்­துள்­ள­தாக பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

துப்­பாக்கிச் சூட்டை அடுத்து சந்­தேக நபர்கள் தப்பிச் சென்­றுள்ள நிலை­யி­லேயே பொலிஸார் இந்த சந்­தே­கத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

பாதையில் பல மீற்­றர்­க­ளுக்கு காணப்­பட்ட இரத்தக் கறை­களை மையப்­ப­டுத்­தியே பொலிஸார் இந்த சந்­தே­கத்தை வெளிப்­ப­டுத்­து­வ­தாக பொலிஸ் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். அத்­துடன் சம்பவம் குறித்த விசா­ர­ணைகள் உட­ன­டி­யாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வுக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் வெதிசிங்கவின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.

By

Related Post