Breaking
Sun. Sep 22nd, 2024

– எம்.எப்.எம்.பஸீர் –

தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் ஓய்­வு­பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இதற்­கான தீர்­மா­னத்தை ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன மேற்­கொண்­டுள்ளார். இத­ன­டிப்­ப­டையில், சிசிர மெண்டிஸ் இன்று 28ஆம் திகதி தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக கட­மை­களை பொறு­பேற்க உள்ளார்.

சிசிர மெண்டிஸ், ஓய்­வு­பெறும் போது பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரி வின் பணிப்­பா­ள­ரா­கவும் குற்றப் புல­னா ய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரா­கவும் கட­மை­யாற்­றி­யமை விஷேட அம்­ச­மாகும்.

முன்­ன­தாக கடந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலப்­ப­கு­தியின் போது தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலைவ­ராக மேஜர் ஜெனரல் கபில ஹெந்­தா­வி­தா­ரண கட­மை­யாற்­றினார். எனினும், ஆட்சி மாற்­றத்­துடன் அவரும் பத­வியில் இருந்து ஓய்வு பெற்­றுள்­ளதைத் தொடர்ந்தே புதிய தலை­வ­ராக ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மென்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Post