Breaking
Mon. Mar 17th, 2025

– எம்.சி.அன்சார் –

திகாமடுல்ல மாவட்த்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றியை உறுதிப்படத்தும் மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று முன்தினம் (08) சம்மாந்துறை மல்கம்பிட்டி வீதியில் மீயன்னா சந்தியில் இடம்பெற்றது.

அகில இலங்பை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அகில இலங்பை மக்கள் காங்கிரஸின் தலைவரும். அமைச்சருமான ரிசாத் பதியுதீன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சேகு இஸ்ஸதீன், பிரதியமைச்சர் எம்.எஸ். அமீர் அலி, அகில இலங்பை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

நள்ளிரவு 1.00 மணியையும் தாண்டி நடைபெற்ற இக்கூட்டதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் உரையை கேட்டமை குறிப்பிடத்தக்கது.

acmc.jpg2_ acmc acmc.jpg2_.jpg3_.jpg4_ acmc.jpg2_.jpg3_

Related Post