Breaking
Fri. Sep 20th, 2024
– A.R.A. பரீல் –
தேர்தலுக்காக முஸ்லிம்களின் சமய கடமைகள் பாதிக்­கப்­படக் கூடா­தெ­னவும் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை முஸ்­லிம்­களின் புனித மாத­மான ரம­ழானில் நடாத்த வேண்டாம் எனவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ர­விட்­டுள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கே ஜனா­தி­பதி இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார்.
எதிர்­வரும் ஜூன் மாதம் முஸ்­லிம்­களின் புனித கட­மை­களில் ஒன்­றான நோன்பு நோற்கும் ரமழான் மாத­மா­கையால் அம்­மா­தத்தில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடாத்த வேண்டாம் எனவும் தேர்­தலை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதத்­துக்கும் பின்பு நடாத்­து­மாறும் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா ஆகி­யோ­ரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தார்.
அமைச்சர் ஹலீமின் கோரிக்­கையை ஆராய்ந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கு­றிப்­பிட்ட உத்­த­ர­வினைப் பிறப்­பித்­துள்ளார்.
உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் ஜூனில் நடாத்­தப்­பட்டால் அதனால் முஸ்லிம் வாக்­கா­ளர்­களும் அபேட்­ச­கர்­களும் பாதிக்­கப்­ப­டு­வார்கள்.
முஸ்­லிம்­களின் இரவு நேர தராவீஹ் தொழுகை உட்­பட விசேட மத கிரி­யை­க­ளுக்கு இதனால் பாதிப்பு ஏற்­ப­டு­மெ­னவும் அமைச்சர் ஹலீம் ஜனா­தி­ப­திக்கு கடிதம் மூலம் தெரி­வித்­தி­ருந்தார்.

By

Related Post