Breaking
Thu. Mar 20th, 2025

முன்னாள் அமைச்சர்  பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷ இன்று (01) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரச சொத்ததுக்களை தனது  தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்தமை, உள்நாட்டு பயணங்களின் விமானச் சேவைக்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் பசில் ராஜபக்ஷ கடந்த ஜுலை 18 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post