Breaking
Sat. Sep 21st, 2024

பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநாக தேசிய பாடசாலையின் மாணவர்கள் இருவர் நேற்று முன்தினம் (14) முதல் காணாமல் போயிருப்பதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தரம்-9 மற்றும், தரம்-8 இல் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு காணாமல் போயிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாடசாலை விட்டு மாணவர்கள் வீடு திரும்பாததனால் இவர்களை பெற்றோர் தேடியுள்ளதுடன் இறுதியில் நாவுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தற்சமயம் குறித்த மாணவர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

By

Related Post