Breaking
Tue. Mar 18th, 2025

அமைச்சின் ஊடகப் பிரிவு

நாட்டின் வர்த்தக நிலையங்களை நுகர்வோர் அதிகார சபை நேற்றும் 22 நடாத்திய தேடுதல் நடவடிக்கைகளில் முறைகேடான விற்பனைகளில் ஈடுபட்ட  106 வர்த்தகர்கள் அகப்பட்டுள்ளனர்.

கொழும்பு – 13, கம்பஹா – 8, களுத்துறை – 5, பதுளை – 3, புத்தளம் – 6, காலி – 5, ஹம்பாந்தோட்டை- 4, மாத்தளை – 5, நுவரெலியா – 6, கண்டி – 12, மட்டக்களப்பு -6, திருகோணமலை- 4, அம்பாறை – 4, பொலநறுவை – 3, அநுராதபுரம் – 11, கேகாலை -7 என 106 வர்த்தகர்கள் அகப்பட்டதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை அரிசியை விலை கூட்டி விற்ற 54 வர்த்தகர்களும் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post