Breaking
Sat. Sep 21st, 2024

ஆதம் நபியால் நிர்மாணிக்கப்பட்டதாகவும், இறைவனுக்கான முதல் வணக்கஸ்தலம் என்றும் நம்பப்படும் மக்காவில் உள்ள அல்-மஸ்ஜித்-அல்-ஹரம் வளாகத்தில் உள்ள புனித ‘கஃபா’வை ரமலான் நோன்பு துவங்குவதற்கு முந்தைய அந்நாட்டின் வழக்கப்படி சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் இன்று கழுவி, தூய்மைப்படுத்தினார்.

பட்டத்து இளவரசர் முஹம்மது பின் நயிப் உடன் கஃபாவுக்கு வருகைதந்த மன்னரை மக்கா நகர கவர்னர் வரவேற்றார். மக்கா நகரில் நிறைவேற்றப்படவுள்ள முக்கிய திட்டங்கள் தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மன்னர், இந்த திட்டங்களை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மக்கா நகர கவர்னரும், தனது மகனுமான இளவரசர் காலித்-துக்கு உத்தரவிட்டார்.

Related Post