Breaking
Fri. Sep 20th, 2024

அர­சாங்கம் இஸ்­லா­மிய அபி­வி­ருத்தி வங்­கியின் உறுப்­பு­ரி­மையை பெற்றுக் கொள்­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்தும் இதன் மூலம் நாட்டில் ஷரீஆ சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சிப்­பதை எதிர்த்தும் பொது­ப­ல­சேனா அமைப்பு ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு மக­ஜ­ரொன்­றினைக் கைய­ளித்­துள்­ளது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை பொது­ப­ல­சே­னாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­ன­கே­யினால் இந்த மகஜர் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட மக­ஜரில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

இலங்கை தற்­போது எதிர்­நோக்­கி­யுள்ள பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக ஒரு பில்­லியன் அமெ­ரிக்க டொலரைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக இலங்­கையில் சமய ரீதி­யி­லான வங்கி முறை­யொன்­றினை அரசு அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ள­தாக அறி­கிறோம். இஸ்­லா­மிய அபி­வி­ருத்தி வங்­கியின் அங்­கத்­து­வத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­ப­்பட்டு வரு­வ­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது.

இந்த நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு இது­வரை ஆட்சி செய்த ஐ.தே.க. மற்றும் ஸ்ரீல.சு. கட்சி பொறுப்புக் கூற வேண்டும் என்­ப­துடன் நாட்டை தேவை­யற்ற பிரச்­சி­னை­க­ளுக்கும் ஆளாக்­கி­யுள்­ளன.

மத்­திய வங்­கியின் ஆளுநர் நாட்டில் இனங்­க­ளுக்கிடையில் பிள­வு­களை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான சமய ரீதி­யி­லான வங்கி முறை ஆரம்­பிக்­கப்­ப­ட­மாட்­டாது என ஏற்­க­னவே எமக்கு எழுத்து மூல­மான உறுதி வழங்­கி­யுள்ளார். இந்­நி­லையில் இலங்­கையில் இஸ்­லா­மிய வங்­கி­முறையை நிறுவ முயற்­சிப்­ப­தா­னது மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

ஆட்­சி­யா­ளர்­களின் திற­மை­யற்ற ஆட்­சி­யினால் முஸ்லிம் அல்­லாத நாடொன்றில் இவ்­வா­றான இஸ்­லா­மிய ஷரீஆ சட்­டத்தை அமுல்­ப­டுத்த இர­க­சி­ய­மாக முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. மக்களின் பணம் தொடர்பில் பொறுப்பு கூறவேண்டிய பாராளுமன்ற மும் இது தொடர்பில் மௌனமாக இருப்பது மிகவும் ஆபத்தானதாகும் என்பதை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post