Breaking
Sat. Sep 21st, 2024

மனித வியா­பாரம் கார­ண­மாக பொரு­ளா­தாரத் தடை­வி­திக்கும் பட்­டி­யலில் இலங்கை இடம் பெற்­றுள்­ளது. கடந்த அர­சாங்கம் இது தொடர்­பாக எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­காமல் இருந்­துள்­ளது என வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார்.

மனித வியா­பா­ரத்­துக்கு எதி­ராக செயற்­படும் மத்­திய நிலையம் ஒன்றை நேற்று முன்­தினம் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு வியா­பாரம் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் என்­ப­துடன் சட்­ட­வி­ரோத செய­லாகும் என இலங்­கையின் தண்­டனை கோவை சட்­டத்தில் தெளி­வாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நாடு என்ற வகையில் வெளி­நாட்டு தொழி­லா­ளர்கள் தொடர்­பாக கதைத்­தாலும் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தி­னாலும் நாங்கள் நல்ல நிலை­மையில் இல்லை.

கடந்த காலத்தில் இந்த துறையில் இருந்­த­வர்கள் இந்த பிரச்­சினை இந்­த­ளவு பெரி­தாகும் வரைக்கும் இது தொடர்­பாக எந்த நட­வ­டிக்­கை­யையும் ஏன் எடுக்­க­வில்லை என்­பது தெரி­ய­வில்லை. ஐக்­கிய நாடுகள் சபை­யினால் மேற்­கொள்­ளப்­பட்ட கணிப்­பீ­ட்டின்­ மூலம் இலங்­கை மனித வியா­பா­ரத்­துக்கு இலக்­காகும் நாடாக இலங்கை வெளிப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று மனித வியா­பாரம் கார­ண­மாக பொரு­ளா­தாரத் தடை விதிக்கும் பட்­டி­ய­லிலும் எமது நாட்டின் பெயர் இடம் பெற்­றுள்­ளது.

நாடு என்ற வகையில் இலங்கை இந்த மனித வியா­பா­ரத்தை தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­றதா அல்­லது தொடர்ந்து அதே நிலை­மையில் இருக்­கின்­றதா என்­பதை ஐக்­கிய நாடுகள் சபை தொடர்ந்து கண்­கா­ணித்துக் கொண்­டி­ருக்­கின்­றது.

எனவே மனித வியா­பா­ரத்­துக்கு எதி­ராக செயற்­படும் இந்த மத்­திய நிலையம் மூலம் வெளி­நாட்டு தொழி­லா­ளர்கள் உட்­பட மனித வியா­ப­ாரத்­துக்கு ஆளா­கின்­ற­வர்­க­ளுக்கு தேவையான நிவா­ர­ணங்­களை பெற்­றுக்­கொ­டுத்தல், பாது­காப்­ப­ளித்தல் மற்றும் சட்­டத்­துக்கு அமைய நட­வ­டிக்கை எடுத்தல் போன்ற நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன.

அத்­துடன் மனித வியா­பா­ரத்­துக்கு தொடர்­பு­பட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக சர்­வ­தேச ரீதியில் உத­வி­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக இந்த மத்­திய நிலையத்­தி­னூ­டாக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். மனித வியா­ப­ாரத்­துக்கு இலக்­கா­கின்­ற­வர்கள் தங்­க­ளுக்கு நிகழ்ந்த அநீ­திகள் தொடர்­பா­கவும் இந்த மத்­திய நிலை­யத்தில் முறைப்­பா­டு­களை தெரி­விக்­கலாம்.

இந்த முறைப்­பா­டுகள் தொடர்­பாக சர்­வ­தேச வெளி­நாட்டு தொழில் அமைப்பு, சர்­வ­தேச தொழி­லாளர் அமைப்பு போன்ற நிறுவனங்கள் மற்றும் பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றுடன் தொடர்புபட்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கல், பாதுகாப்பு ஏற்பாடுகளும் இடம்பெறும் என்றார்.

By

Related Post