Breaking
Sun. Mar 16th, 2025
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் செய்தி, நேற்று செவ்வாய்க்கிழமையிலிருந்து (01) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த செய்திச் சேவை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் நண்பகல் 12 மணிக்கு இனி தொடர்ச்சியாக ஒலிபரப்பாகும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் என். இலங்ககோனின் ஆலோசனையின் கீழ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செயலாளரான சட்டத்தரணி நந்த முருத்தெட்டுவேகமவினால் இச்சேவை மீள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

By

Related Post