மத்திய மாகாண சபையின் புதிய ஆளுனராக நிலுக்கா ஏக்கநாயக்க, சற்றுமுன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி மத்திய மாகாண ஆளுனராக இருந்த சுராங்கனி எல்லாவல சுகயீனம் காரணமாக உயிரிழந்ததையடுத்து, காணப்பட்ட வெற்றிடத்துக்கு நிலுக்கா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.