Breaking
Tue. Mar 18th, 2025

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் மன்னார், மாந்தை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம அமைப்புக்களுக்கான தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (19), மாந்தை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

மாந்தை பிரதேச செயலகத்தின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன், 08 சமூக சேவைகள் அமைப்புக்களுக்கான உபகரணங்களையும் கையளித்தார்.

இந்நிகழ்வில், மாந்தை பிரதேச செயலகத்தின் செயலாளர், உதவிச் செயலாளர், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாஹிர், மாந்தை பிரதேச சபையின் முன்னாள் உதவித்தவிசாளர் தெளபீக், முன்னாள் உறுப்பினர்களான பிரசித்தா, நைஸர், விஜயபாண்டி, பெருமால், ராசையா மற்றும் இணைப்பாளர் முனவ்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Post