Breaking
Sun. Sep 22nd, 2024

மன்னார், அடம்பன், பள்ளிவாசல்பிட்டியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுல்குலபாஉர் – ராஷிதீன் பள்ளிவாசல் நேற்று (14/10/2016) திறந்து வைக்கப்பட்டது.

வடமாகாண மஜ்லிஸூஸ் ஷூராவின் தலைவர், மௌலவி எஸ்.எச்.எம்.ஏ.முபாரக்தலைமையில் இடம்பெற்ற இந்தத் திறப்புவிழாவில், பிரதம விருந்தினராக அமைச்சர்றிசாத் பதியுதீன் பங்கேற்று, பள்ளிவாசலைத் திறந்து வைத்தார்.

கௌரவ விருந்தினர்களாக வணக்கத்துக்குரிய பேராயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம் பிள்ளை, பாராளுமன்ற உறுப்பினர்களான நவவி, இஷாக், மற்றும் மாகாண சபைஉறுப்பினர் றிப்கான் பதியுதீன், பொறியியலாளர் ஜௌபர் இஸ்மாயீல் உட்பட பலர்பங்கேற்றனர்.

14678027_659389244227124_151200450_o 14729186_1444173042265553_1515723072489435739_n-1 jk

By

Related Post