Breaking
Wed. Oct 23rd, 2024

திரு­கோ­ண­மலை மாவட்டம், சம்பூர் பிர­தேசத்தில் கடந்த அர­சாங்­கத்­தினால் சுவீ­க ரிக்­கப்­பட்ட மக்கள் குடி­யி­ருப்பு காணி­க ளில் ஒரு பகு­தியை விடு­விப்­பது தொடர்­பான ஜனா­தி­ப­தியின் விஷேட வர்த்­தமானி பிர­க­டனம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் இது தொடர்­பாக பிர­க­டனம் வெளி­யி­டப்­பட்­டுள்ள விஷேட வர்த்­த­மானி அறி­வித்­தலின் படி, குறித்த காணி சுவீ­க­ரிப்பு தொடர்­பாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவினால் வெளி­யி­டப்­பட்­டி­ருந்த இரு வர்த்­த­மானி பிர­க­ட­னங்கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.

ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள இந்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு குறித்து அந்த பகு­தியில் கடந்த 9 வரு­டங்­க­ளாக தமது மீள்­கு­டி­யேற்­றத்தை எதிர்­பார்த்து காத்­தி­ருக்கும் சம்பூர் பிர­தேச மக்கள் மகிழ்­சியும் உற்­சா­கமும் அடைந்­துள்­ளார்கள்.

முத­லீட்டு ஊக்­கு­விப்பு சபைக்கு குறித்த காணி கைய­ளிப்பு தொடர்­பாக 2012.07.19 திக­தி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி பிர­க­டனம், அதனை தொடர்ந்து கைத்­தொழில் ஊக்­கு­விப்பு வல­ய­மாக பிர­க­டனம் செய்யும் வகையில் 2012.05.17 அன்று வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி பிர­க­டனம் ஆகி­ய­னவே ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன. இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 818 ஏக்கர் காணி மீளப் பெறப்பட்டு காணிகளை இழந்த மக்களிடம் மீளக் கையளிக்கப்படவுள்ளது

Related Post