Breaking
Fri. Sep 20th, 2024

மஹிந்த ராஜ­பக் ஷ இந்­நாட்டில் யுத்­தத்தை முடித்து வைத்த யுக புரு­ஷ­ராவார். அவரை சிறையில் அடைப்­ப­தற்கு எடுக்­கப்­படும் முயற்­சிகள் தவ­றான செயற்­பா­டாகும் என நேற்று சபையில் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன தெரி­வித்தார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் தொடர்பில் ஐ.ம.சு.மு. பங்­காளிக் கட்சித் தலை­வர்­க­ளான தினேஷ், விமல், வாசு­தேவ ஆகி­யோரின் ஆத­ரவு கிடைத்­துள்­ள­தா­கவும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற அர­சி­ய­ல­மைப்பு சபை தீர்­மானம் தொடர்­பான விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் சபையில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், யார் எதைச் சொன்­னாலும் பல தலை­வர்­களும் முயற்­சித்து முடி­யாமல் போன யுத்­தத்தை முடித்து வைத்த பெருமை மஹிந்த ராஜ­ப­க் ஷ­வையே சாரும்.

இன்று அவரை திருடர், ஊழல் மோச­டி­க்காரர் என்று விமர்­சித்­தாலும் யுத்­தத்தை முடித்த மாபெரும் தலைவர் அவர்.

அது மட்­டு­மல்­லாது நாட்டின் அபி­வி­ருத்­தி­க­ளையும் அடிப்­படை வச­தி­க­ளையும் மேம்­ப­டுத்­தினார். வடக்­கிற்கு புகை­யி­ரத சேவையை ஆரம்­பித்து வைத்தார்.

கடந்த கால ஆட்­சியின் போது பல பிரச்­சி­னைகள் காணப்­பட்­டமை உண்­மைதான். அவை சரி­யான முறையில் தீர்க்­கப்­ப­ட­வில்லை.

எனவே இன்று அனை­வ­ருக்­கி­டை­யேயும் தேசிய இணக்­கப்­பாடு தேவைப்­ப­டு­கின்­றது. மஹிந்த ராஜ­பக் ஷ நாட்­டுக்கு சேவை செய்­தவர். எனவே அவரை சிறையில் அடைக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வது பிழை­யான செயற்­பா­டாகும்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி முன்­வைத்த திருத்­தங்கள் அனைத்தும் பிர­தி­வா­தங்­க­ளாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டன.

இத்திருத்தங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தினேஷ், விமல், வாசுதேவ போன்றோரின் திருத்தங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

By

Related Post