Breaking
Sat. Dec 13th, 2025

இன்றைய தினம் (16) மன்னார், முசலி பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது வாக்களித்த பாலைக்குளி, முள்ளிக்குளம், மரிச்சிக்கட்டி, கரடிக்குழி மற்றும் கொண்டச்சி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட், கட்சியின் உயர்பீட உறுப்பினர் Dr.மிக்றா, முசலி பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பைறூஸ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான சாஹிர், ராபி மௌலவி, நிசார், அஸ்பர், உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

Related Post