அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
ரமழானின் அருட்கொடைகள் சகலருக்கும் கிடைப்பதுடன், நோன்பு கால அமல்களில் சிறப்பாக ஈடுபடுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்! அருள்பாலிக்க பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
புனித ரமழானை வரவேற்று, அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“அல்லாஹுத்தஆலா ரமழான் மாத அமல்களுக்கு சிறப்புக் கூலி தருவதாக வாக்களித்துள்ளான். நமது முன்னோர்களும் இந்த சங்கை மிகுந்த ரமழானின் சிறப்பால் உயர்வடைந்ததாகவும் புனித அல்குர்ஆன் நமக்கு ஞாபகமூட்டுகின்றது.
மறுமை ஈடேற்றத்திற்கான வரப்பிரசாதமாக, இந்த அருள்மிக்க ரமழானைக் கருதி, இயலுமானவரை நல்லமல்களில் ஈடுபடுவோம்.
பாவக்கறைகளிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கான கேடயமாகவும் இந்தப் புனித மாதத்தை பயன்படுத்துவோம்.
சர்வதேச அளவில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிக்கொள்வதற்கு இறைவனை பிரார்த்திக்க இம்மாதம் பயன்படட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
“May this holy month of Ramadan bring you and your loved ones peace, prosperity, and endless blessings. May your Imaan be strengthened, your prayers answered, and your hearts filled with light.
Let us embrace this sacred time with patience, gratitude, and unity.”