Breaking
Sat. Sep 21st, 2024

திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேசத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுவினர் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை  பிரதியமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான  அப்துல்லா மஹரூப் அவர்களின் ஏற்பாட்டில் வர்த்தக வாணிப கைத்தொழில் கூட்டுறவு மற்றும் நீண்ட காலம் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல் அமைச்சரும் கட்சியின் தேசிய தலைவருமான றிசாத் பதியூதீனை சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பானது இன்று வியாழக்கிழமை இரவு  பிரதியமைச்சர் அலுவலகத்தில் இடம் பெற்றது. மூதூர் பிரதேச மத்திய குழுவினர் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவும் தங்களது கருத்துக்களையும் முன்வைத்தார்கள்.

திருகோணமலை மாவட்டத்துக்கு விரைவில்  விஜயம் செய்யவுள்ளதாகவும்  கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, மூதூர் பிரதேச சபை உறுப்பினர் அகீதா,கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன், வட்டார வேட்பாளர் சியாம் உட்பட மூதூர் மத்திய குழு உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றார்கள்.

Related Post