Breaking
Mon. Mar 17th, 2025

இம்றை ரமழான், சென்ற வருடம் போன்றே அனேகமான நாடுகளில் கோடைகாலத்தில் எதிர்நோக்கி வருவதால் நீண்ட நேரம் நோன்பு நோற்க வேண்டிய நிலை உலக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தவகையில் ஐரோப்பாக் கண்டத்தைச் சேர்ந்த பல நாடுகளில் 18-19 மணி நேரங்கள்அங்குள்ள மக்கள் நோன்பு நோற்கின்றனர்.

அதிகாலை 02:30 தொடக்கம் மாலை 9:45 வரைக்கும், இன்னும் சில இடங்களில் அதிகாலை 3 மணியிலிருந்து மாலை 9:30 மணிவரைக்கும், இன்னும் சில பிரதேசங்களில் இதனைவிட சில மணி நேரங்கள் அதிகமாக அல்லது குறைவாக நோன்பை நோற்கின்றனர்.

இந்தவகையில் ஐரோப்பிய நாடுகளில் 18 அல்லது 19 மணி  நேரங்கள் நோன்பு நோற்கின்றனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகாலை 4 மணியிலிருந்து மாலை 7 மணிவரை சராசரியாக நோன்பு நோற்கின்றனர். இதனடிப்படையில் 15 மணி  நேரங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்கள் நோன்பு நோற்கின்றனர்.

Related Post