Breaking
Sun. Mar 16th, 2025

விசாரணைகளைத் திசை திருப்பும் நோக்கிலேயே பம்பலப்பிட்டி வர்த்தகரைக் கடத்திச்சென்று கப்பம் கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டிய பகுதியில் வசிக்கும் வர்த்தகரான மொஹமட் சுலைமான் கடந்த 21ஆம் திகதி கடத்தப்பட்ட நிலையில் அண்மையில் மாவனெல்ல பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் ஐந்து பேருக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் நேற்று தடை விதித்ததுள்ளது. கொலை செய்யப்பட்டவரின் உறவினர்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனை நேற்று நிறைவடைந்துள்ள நிலையில், சுலைமான் கடத்தப்பட்டு 4 மணித்தியாலங்களுக்குள் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

By

Related Post