Breaking
Fri. Sep 20th, 2024

இந்­திய கர்­நா­டக மாநி­லத்தை சேர்ந்த நப­ரொ­ருவர் திரு­ம­ணத்தில் ரசம் இல்­லா­ததால் தனது திரு­ம­ணத்தை நிறுத்­திய சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது.

கர்­நா­டக மாநிலம் தும்கூர் மாவட்­டத்தைச் சேர்ந்த குனிக்கல் பகு­தியைச் சேர்ந்த பிர­காசம் – சௌபாக்­கி­யம்மா தம்­பதிகளின் மகள் சௌமியா. இவ­ருக்கும் ஸ்ரீரா­ம­புரம் திம்­மை­யம்மா மகன் ராஜு­வுக்கு குனிக்கல் கிரா­மத்தில் நேற்­று­முன்­தினம் திரு­மணம் நடப்­ப­தாக முடி­வா­னது.

திரு­ம­ணத்­துக்கு முதல் நாள் இரவு திரு­மண வர­வேற்பு விருந்து இடம்­பெற்­றுள்­ளது. மண­மகன் ராஜு தனது குடும்­பத்­தி­ன­ருடன் மிக தாம­த­மாக மண்­ட­பத்­துக்கு வந்­துள்­ள­தை­ய­டுத்து உடனே அவர்­க­ளுக்கு உணவு பரி­மா­றப்­பட்­டது. அப்­போது அவர்கள் சாப்பாட்டில் ரசம் போதாது என கேட்­டுள்ளனர்.  ரசம் முடிந்து விட்­ட­தாக பெண் வீட்டார் கூறி­யுள்­ளனர்.

உடனே மண­மகன் குடும்­பத்­தினர் ஆவே­ச­ம­டைந்­து பெண் வீட்­டா­ரிடம் தக­ராறு செய்­துள்­ளனர்.  பெண்­வீட்டார் எவ்­வ­ளவோ கூறி சம­ரசம் செய்­துள்­ளனர்.

ஆனால், மண­மகன் வீட்டார் சமா­தா­ன­ம­டை­யாமல் மண்­ட­பத்தில் அவர்­க­ளுக்கு ஒதுக்­கிய அறைக்கு சென்­றுள்­ளனர்.

மறுநாள் அதி­காலை நலுங்கு நிகழ்ச்­சிக்­காக மண­மகன் குடும்­பத்­தி­னரை அழைப்­ப­தற்­காக அவர்­க­ளது அறைக்கு சென்­ற­போது அங்கு மண­ம­கனை காண­வில்லை.

தனது பெற்றோர் மற்றும் உற­வி­ன­ருடன் இர­வோடு இர­வாக மண்­ட­பத்தை விட்டு வெளி­யே­றி­யுள்­ளமை தெரிய வந்­துள்­ளது. இதனால் திரு­மணம் நின்­றுள்­ளது. இத­னை­ய­டுத்து சௌமி­யா­வுக்கு வேறு ஒருவருடன் திருமணம் இடம் பெற்றுள்ளது.

ரசம் பரிமாறாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர் மீது பெண் வீட்டார் முறைப்பாடு செய்துள்ளனர்.

– See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=14581#sthash.t7VsL01a.dpuf

By

Related Post