Breaking
Mon. Mar 17th, 2025

– வாஜித் –

பேரினவாத சமூகம்,இனவாத ஊடகங்கள் மற்றும் வங்குரோத்து அரசியல்வாதிகள் ஒன்றாக சேர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட இருக்கின்றது.

அமைச்சர் மீது சுமத்தபட்ட குற்றசாட்டுக்கள் றிஷாட் பதியுதீன் வில்பத்து காடுகளை அழித்து முஸ்லிம் வலையம் ஒன்றை உருவாக்குகின்றார்,காட்டு யானைகளை அழிக்கின்றார் என்றும் இன்றும் பல போலியான குற்றசாட்டுகளை சுமத்தியும் ஆறுக்கு மேற்பட்ட வழக்குகளை தொடுத்து உள்ளார்கள்.

வில்பத்து தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று கொழும்பு நீதி மன்றத்தில் முதல் தடவையாக விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட உள்ளது.

இந்த வழக்கில் முஸ்லிம் சமூகத்திற்கும் மற்றும் றிஷாட் பதியுதீன் தலைவருக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று ஐந்து நேர தொழுகையிலும் பிரார்த்திப்போம்.

பிரார்த்திப்போம்.

Related Post