Breaking
Sat. Sep 21st, 2024

யுத்­தக்­குற்­ற­ச்சாட்­டுகள் மற்றும் நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையில் அமை­வான விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளுக்கு வெளி­நாட்டு நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்பு வேண்­டி­­யதில்லை. இதற்கு ஒரு போதும் ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி பங்­க­ளிப்பு வழங்­காது. இவ்­வி­டயம் தொடர்பில் எமது நிலைப்­பாட்டில் எவ்­வித மாற்­றங்­களும் கிடை­யாது என ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி பிர­தி­நி­தியும் அமைச்­ச­ரு­மான மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.

இவ்­வார இறு­தியில் ஜக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் இலங்­கைக்­கான விஜ­யத்தை முன்­னெ­டுக்­க­வுள்ள நிலையில் தேசிய அர­சாங்­கத்தின் கீழ் முன்­னெ­டுப்­பட்டு வரும் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யங்கள் தொடர்பில் இரண்டு கட்­சி­களின் பிர­தி­நி­தி­களும் ஒன்­றி­னைந்து இது தொடர்பில் தெளி­வுப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சியம் எனவும் அவர் வலி­யு­றுத்­தினார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று செவ்­வாய்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் திறன்கள் அபி­வி­ருத்தி மற்றும் தொழிற்­ப­யிற்சி அமைச்­ச­ரு­மான மஹிந்த சம­ர­சிங்க மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இதன் போது அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்.

கடந்த காலங்­களில் ஜெனி­வாவில் எமது நாட்டின் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு அமை­வான செயற்­பா­டு­களை இரண்டு பிர­தான கட்­சி­களின் ஒரு­மித்த ஒத்­து­ழைப்­புகள் மூலம் தேசிய அர­சாங்­கத்தின் மூல­மா­கவே கையாள முடியும். அந்­த­வ­கையில் இவ்­வி­ட­யத்தில் வெளி­நாட்டு நீதி­ப­களின் தலை­யீ­டுகள் தொடர்பில் எமக்­கான அன்­றைய நிலைப்­பாடே தற்­போதும் காணப்­ப­டு­கின்­றது.

அந்­த­வ­கையில் தேசிய அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் தற்­போ­தைய நல்­லி­ணக்கம் மற்றும் யுத்­த­குற்ற விசா­ர­ணை­க­ளுக்கு வெளி­நாட்டு நீதி­ப­தி­களின் உத­வி­களை பெற்று கொள்­வது தொடர்­பி­லான விட­யத்­துக்கு நாம் ஒரு போதும் இணங்க போவது இல்லை. அவ்­வா­றான எந்­த­வொரு விட­யங்­களும் இடம் பெறாது. என்­ப­த­னையும் நாம் உறு­தி­யாக கூறி­கொள்­கின்றோம்.

கடந்­தக்­கால அர­சாங்­கத்தின் கீழ் எமது நாட்­டுக்கு வருகை தந்த ஐக்­கிய நாடு­களின் முன்னாள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை உட்­பட அனைத்து வெளி­நாட்டு பிர­தி­நி­தி­க­ளுக்கும் இந்த விட­யத்தை நாம் தெளி­வாக குறிப்­பிட்­டி­ருந்தோம். இவ்­வா­றான நிலையில் இவ்­வார இறு­தியில் தற்­போ­தைய ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் இலங்­கைக்­கான விஜ­யத்தை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக தகவல் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

அந்­த­வ­கையில் தேசிய அர­சாங்­கத்தின் கீழ் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யங்கள் தொடர்பில் இரண்டு கட்­சி­களின் பிர­தி­நி­தி­களும் ஒன்­றி­ணைந்து இது தொடர்பில் தெளி­வுப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சியம். எவ்­வா­றா­யினும் யுத்­தக்­குற்ற விசா­ர­னை­களை முன்­னெ­டுக்கும் போது வெளி­நாட்டு நீதி­ப­தி­களை எவ்­வா­றான நிலை­யிலும் நாம் இணைத்து கொள்­ளப்­போ­வது இல்லை இவ்­வி­ட­யத்தில் நாம் உறு­தி­யா­க­வுள்ளோம்.

அன்­மையில் வெளி­நாட்டு சேவை­யொன்­றுக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வழங்­கிய சேவையில் இதனை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்தார். எமது நாட்டில் நடை­பெற்ற யுத்த நட­வ­டிக்­கை­யா­னது முற்­று­மு­ழு­வ­து­மாக பயங்­க­ர­வா­தி­களை இலக்­காக கொண்டு முன்­னெ­டுக்­கப்­பட்ட யுத்­தமே ஆகும். சிவில் சமூ­கங்­களை பாது­காக்க அனைத்து நட­வ­டிக்­கை­களும் எமது இரா­ணு­வத்­தி­ன­ரினால் முன்னெடுக்கப்பட்டன. இதற்காக எமது இராணுவ வீரர்கள் பல்வேறு உயிர் தியாகங்களை முன்னெடுத்தனர். என்பதனை மறந்து விடமுடியாது. மறுபுறம் யுத்தநடவடிக்கையின் போது ஒரு சிலர் தவறுகள் இழைத்திருக்கலாம். அதனை நாம் ஏற்றுகொள் கின்றோம். இதனை கொண்டு அனைத்து இராணுவ வீரர்களையும் குற்றம் சுமத்துவதானது அர்த்தமற்றது. இது தொடர்பில் விரிவான விசாரனைகளை முன்னெடுப்பதனை நாமும் வலியுருத்துகின்றோம் என்றார்.

By

Related Post