Breaking
Sun. Sep 22nd, 2024

அர­சாங்­கத்தின் இர­க­சி­யங்­களை வெளி­யிட்­டமை உட்­பட சில குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் வெளி­வி­வ­கார அமைச்சில் பணி­பு­ரியும் 13 அதி­கா­ரிகள் அடுத்த வாரம் பத­வி­களில் இருந்து நீக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

இவ்­வாறு பதவி நீக்­கப்­பட உள்ள அதி­கா­ரி­களில் 8 பேர் உயர் அதி­கா­ரிகள் எனக் கூறப்­ப­டு­கி­றது. மேலும் இந்த அதி­கா­ரிகள் தன்­னிச்­சை­யாக செயற்­பட்டு கொண்டு வாகனம், எரி­பொருள் உட்­பட அனைத்து வச­தி­க­ளையும் பெற்­றுக்­கொண்டு வெறு­மனே காலத்தைக் கடத்தி வரு­வ­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் ஆகியோரிடையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் பின்னர் இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் கடந்த காலங்­களில் வெளி­வி­வ­கார அமைச்சில் காணப்­பட்ட செயற்­திறன் இன்மை, அமைச்சின் சில அதி­கா­ரிகள் கார­ண­மாக இலங்­கைக்கு ஏற்­பட்ட பாதிப்­பு ஆகிய நிலை­மை­களை அடிப்­ப­டை­யாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

By

Related Post