Breaking
Tue. Mar 18th, 2025
தேர்தல் தொடர்பான 20ஆவது திருத்தத்துக்கு ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த திருத்தமானது, நாட்டில் உள்ள சிறிய ஜனநாயக கட்சிகளை அழிக்கும் செயற்பாடு என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் நாட்டில் உள்ள சிறிய கட்சிகளுக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. இந்நிலையில் புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டால், அந்தக் கட்சிகளின் பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் போய்விடும். இதனை ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் உணர்வார்கள் என்று கெக்கிராவையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.
TKSOU

Related Post