நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை, வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள போட்டியிடும் சபைகளுக்கான கட்டுப்பணம், கட்சியின் மாவட்ட பிரதிநிதிகளினால் செலுத்தப்பட்டது.
அந்தவகையில், அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஒன்பது சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹிர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
அதேபோன்று, வவுனியா மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து போட்டியிடுவதற்காக, ஐந்து சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட், ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரசிகா கமகே மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான பாரி, லரீப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும், திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ் கட்சியில் தனித்துப் போட்டியிடுவதற்காக, பத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரினால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இதன்போது, கட்சியின் உயர்பீட உறுப்பினர் முன்னாள் கிண்ணியா நகரபிதா Dr.ஹில்மி மஹ்ரூப், கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் விவசாய போதானாசிரியர் அனீஸ் உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.