Breaking
Sat. Sep 21st, 2024

ரயில் பயணியின் மண்டையை பிளந்த குற்றத்துக்காக அப்பயணிக்கு 50 ஆயிரம் ரூபாவை நட்டஈடாக வழங்குமாறு கொழும்பு மாவட்ட நீதவான் அமாலி ரணவீர,பொலிஸ் மா அதிபருக்கு (ஐ.ஜி.பி) உத்தரவிட்டார். ரயில் சேவையாளர்கள் வேலைநிறுத்தத்தின் போது, கோட்டை ரயில் நிலையத்தின் வைத்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ரயில் பயணியொருவரின் மண்டை பிளந்துவிட்டது. 2014ஆம் ஆண்டு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த பயணி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர், பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்தார். அவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

By

Related Post