Breaking
Sun. Mar 16th, 2025

கரம்பன் கிராமத்தை பற்றி ஜேர்மனில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனையடுத்து, யாழ். கரம்பனில் வசிக்கும் அவ்விளைஞனின் சகோதரன் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 26 வயதான சகோதரன், ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பியுள்ளார்.

இதேவேளை, தாக்குதல் நடத்தியவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் அதே இடத்தைச் சேர்ந்த இருவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 24 மற்றும் 26 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Post