Breaking
Mon. Sep 23rd, 2024

அமெ­ரிக்­கா­வி­னதும் இலங்கை அர­சாங்­கத்­தி­னதும் சர்­வ­தேச மனித உரி­மைகள் பேர­வையில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட தீர்­மானம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்த கருத்­தி­னை­ய­டுத்து எதிர்க்­கட்சி உறுப்­பி­னரும் மஹிந்த அணி யின் பிர­தா­னி­யு­மான தினேஷ் குண­வர்த்­தன நேற்று பாரா­ளு­மன்றத்­தினுள் அமை­தி­யாக சிரித்­த­வாறே
அமர்ந்து கொண்டார்.

மேற்­படி தீர்­மா­னத்தை வாசித்துப் பார்க்­க­வில்லை என்று கூறும் எனது நெருங்­கிய உறுப்­பினர் (தினேஷ் குண­வர்த்­தன) அதனை வாசித்து அறி­யாது எவ்­வாறு தாய்­நாட்டைப் பாது­காப்போம் எனும் பெயரில் நேற்று (நேற்று முன்­தினம்) மாநாட்டை நடத்த முடிந்­தது என்று கேட்­ட­போதே உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன அமை­தி­யாக அமர்ந்து கொண்­ட­துடன் சிரித்துக் கொண்டும் இருந்தார்.

பாரா­ளு­மன்­றத்தின் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அமர்வின் போது உட­லா­கம, பர­ண­கம மற்றும் ஐ.நா. அறிக்­கை­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் சமர்ப்­பித்தார்.

இதன் போது எழுந்த உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன மேற்­படி மூன்று அறிக்­கை­களைப் பார்க்­கிலும் இலங்கை மீதான அமெ­ரிக்­காவின் தீர்­மானம் அது தொடர்­பி­லான இலங்கை அரசின் இணக்கம் ஆகி­யவை தொடர்­பான அறிக்­கை­யையே நாம் கோரினோம். அவ்­வ­றிக்கை இது­வ­ரையில் எமக்கு கிடைக்­க­வில்லை. அதனை வாசித்து அறிந்து கொள்ள வேண்­டிய தேவை­யுள்­ளது என்றார்.

ரணில்

இதற்குப் பதி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எனது நெருங்­கிய உறுப்­பினர் இவ்­வ­றிக்­கையை கோரி நிற்­கிறார். அதனை வாசித்துப் பார்க்­க­வில்லை என்றும் கூறு­கிறார். அறிக்கை அவ­ருக்கு கிடைத்­தி­ருக்கா விட்டால் அல்­லது அதனை அவர் வாசித்­தி­ருக்­கா­விட்டால் தாய்­நாட்டைப் பாது­காப்போம் எனும் பெயரில் அவரால் எவ்­வாறு நேற்று (நேற்று முன்­தினம்) மாநாட்டை நடத்தியிருக்க முடியும் எனக் கேட்டார்.இதற்குப் பதிலளிக்காமலேயே உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன சிரித்தவாறே அமைதியாக அமர்ந்து கொண்டார்.

By

Related Post